அப்பா,
ஆண்டுகள் பல கடந்துவிட்டன , ஆசையாய் இந்த வார்த்தையை உச்சரித்து....
நீ இல்லாமல் வாழ பழகி ஈரைந்து வருடங்கள் ஆகி விட்டது...
உருவத்தில் உன்னை ஒத்தவனாம் நான், ஒப்பிட்டு பார்க்க தான் இல்லை ஓர் புகைப்படம்...
ஆசையாக தான் இருக்கிறது, கோவத்திலும் என்னை கொஞ்சும் நேரத்திலும் உன் குரல் எப்படி இருக்கும் என்று கேட்க... அனால் நினைத்து பார்க்க கூட நினைவில் இல்லை உன் குரல்......
ஒரு மகனாய் நான் எதிர்பார்த்த ஆசைகள் ஏராளம்,
உன் சுண்டு விரல் பிடித்து ஊர் சுற்ற,
உறக்கமில்லா இரவுகளில் ஒருக்களித்து உன்மீது ஒரு கால் போட்டு தூங்க,
இவை அற்பமாய் இருந்தாலும் அதை கூட அனுபவிக்க இயலவில்லை....
அப்பா நீ இல்லாவிட்டாலும், அடையாளமாய் உன் பெயர் என் பெயரோடு என்றும்..........
நீ விட்டு சென்ற விழுது இன்று வேர் ஊன்ற துவங்கி விட்டது, இதை கண்டு கழிக்க நீயும் இல்லை, கொண்டாடி மகிழ நானும் விரும்பவில்லை....
உனக்கு மறு ஜென்மம் வேண்டுமென்றால் மீண்டும் வா இந்த மண்ணுலகிற்கு என் மகனாய்.........
காத்திருக்கிறேன் தந்தையாகும் தருணம் வேண்டி....
-இவண்
அதியமான் அண்ணாதுரை