மதுவின் மடியில் மயங்கச் செய்த காலனின் காதல் கட்டியவளையும் வென்றதோ,
களவாடியவன் காலன் என்றறியாது ஏனைய கடவுளிடம் ஏகப்பட்ட முறையீடு...
என்ன பயன், அர்ச்சகரின் தட்டில் காணிக்கை விழாததால் கடவுளின் செவிகளுக்கு செல்லவில்லை போலும் என் வேண்டுதல்....
உலகத்தின் இரு விழிக்கு உன் உருவம் ஊமையானதால் நீ இறந்தாய் என அர்த்தமில்லை.
உன் பிம்பத்தின் பிரதிபலிப்பு நான்....
என் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு உதடும் உன்னையும் ஒரு முறை அழைக்கும்...
முகம் கண்டதும் உன் மகன் என பிறர் மும்மொழிகையில் வரும் ஆனந்தம் அளப்பரியது...
உலகத்தின் மீதான என் புரிதலுக்கு உன் பிரிதல் ஓர் முக்கிய காரணி. அதற்கான நன்றிகளோடு உன் நினைவில், உன் வடிவில்,
இவண்,
அதியமான் அண்ணாதுரை
No comments:
Post a Comment