Sunday, 3 December 2017

கற்பனைக் காதல்

ஒப்பணையும் ஓர் அழகு,

உன் கண்ணக்குழியில் இடறி விழுந்த கூந்தலை கோதி செருகும் பொழுது...

கம்பனும் கண்டிடாத கவிப்பாட்டு எண்ணவளின் கால் கொளுசு மெட்டு...

காலை கதிரவனும் காத்திருக்கும் உன் முகம் கண்டு பிரகாசிக்க...

உற்று பார்க்காதே, வெண்ணிலவும் வளர்பிறயை மறக்கக்கூடும்...

கார் மேகத்தையும் களவாடுவேன், உன் விழியின் வீரியத்தை குறைக்க...

பொய் என தெரிந்தும் புன்னகை பூக்கும் இதழ்களுக்காக இன்னமும் உரைப்பேன் ஓராயிரம், ஒன்றிரண்டு உண்மையும் கலந்து....

உயிர் நீத்த பட்டு பூச்சிகள் மோட்சம் பெற்றன, புடவையாய் அது உன் பொன்மேனி அலங்கரிக்க கண்டு...

வனவாசம் செல்லவும் தயங்க மாட்டேன். என்னை ராமனாக மாற்றிய சீதை நீ வழித்துணையாய் வருவதென்றால்...

தென்றலையும் திட்டித் தீர்த்து விட்டேன், எனைத் தான்டி உனைத் தீண்டிய குற்றத்திற்காக...

1 comment:

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...