முதல் பார்வையில் எள்ளளவும் எண்ணமில்லை அவள் என்னவள் என்று...
நொடிக்கொருமுறை மூடித் திறக்கும் இமையும் இசையவில்லை அவளின் இருக்கை நோக்கி...
உரையாடிய ஒரு கனம் உள்ளத்தின் ஓரத்திலும் ஓர் கணம்...
உச்சரித்த வார்த்தை ஒன்றும் புதிதல்ல, இருந்தும் செவி சாய்ந்தன, அவள் இதழ் இடறி விழும் வார்த்தையை வாங்க...
விலகிச் செல்கையில் கருவிழி இரண்டும் கடைக்கண் வந்து எணைக் காண்பதறிந்து கால்களும் நின்றது நீ கடக்க...
நன்றாக என் நாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை "காதல்", அதை உன்னிடம் உரைக்கும் பொழுது ஏணோ உளறி கொட்டியது...
கண்ட நாள் முதல் கொண்ட நியாபகம் அனைத்தும் நினைவாய் நீங்காமல்...
எப்படி உரைக்க மணம் வந்தது ஊதாரி என்று, காலம் கடந்தும் நினைவை சேமித்து வைத்திருக்கும் என்னைப் பார்த்து...
No comments:
Post a Comment