Sunday, 3 December 2017

என் வருங்கால மகளுக்கு...

நெற்றி வியர்வை நிலத்தை முத்தமிட...
நண்பகலிலும் நாளமெல்லாம் ஓர் நடுக்கம்...

என் ஐம்புலனில் ஒன்று மட்டும் ஓர் ஓசை கேட்டு, கண்ணீருக்கு கதவைத் திறக்க கண்ணுக்கு கட்டளையிட்டது...

ஆம், அப்பா என அழைக்கத் தெறியாமல் அழுகையால் அவள் வருகையை சொல்கிறாள் என் மகள்....

நடுக்கத்தை விடுத்து நடை போடத் துவங்கின கால்கள்...

கருப்போ சிவப்போ என காண துடித்த கண்களின் கண்ணீரை கைக்குட்டை குடிக்க ...

அள்ளி ஆரத்தழுவ ஆயத்தமாயின கைகள்...

ஈரைந்து மாதத்தின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் ஒரு சேர இரு விழியில்...

என் இமைக்கும் இரு நாளிகை பொது விடுமுறை, இமைக்காமல் இருக்க...

கட்டியவளோ கண் மூடி இருக்கிறாள்,
ஆனந்த களிப்போ , ஆணவச் செருக்கோ, எதுவாயினும் என்னவளின் துயில் களைக்க எள்ளளவும் எண்ணமில்லை, இருப்பினும் என் வருகையறிந்து கடைக்கண் காலலளவு திறந்து மூடியது. அவள் கருவிழியில் என் பிம்பம் பதிந்ததா என தெரியவில்லை, ஆனால் என் கண் இடறி அவள் கண்ணம் விழுந்த கண்ணீர் சொல்லியிருக்கும்.

என் மகள், ஒள்ளியாய் ஒருவித சிகப்பில் ஒருக்களித்து படுத்திருக்கிறாள், தாயிடம் இருந்து பிரிந்த சோகமோ, தாமதமாயாய் காண வந்த தந்தையின் மீது கோபமோ, தொப்புளை அறுத்து தொட்டிலில் போட்ட வருத்தமோ, காரணத்தை விடுத்து மறுபுறம் சென்று மகளைக் கண்டேன். அவள் சிறு விழியால் புருவம் சுளித்து எனைப் பார்த்த நொடி, மதி மயங்கி நானும் மழலையானேன்.

4 comments:

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...