Sunday, 3 December 2017

எண்ணத்தின் சாரல்

கரை மீது கடல் கொண்ட காதல் அவ்வப்போது அரவணைத்து திரும்பும் அலை சொல்லும் நுரை வடிவில்....!

=================================

காலம் தோறும் சுற்றி வந்தும் புரியவில்லையோ....
நேரத்தின் மீது நெடிமுள் கொண்ட காதலை....!

=================================

தரிசு நிலமும் தாய்மை அடைந்தது....
காக்கை விதைத்த கருவேலம் விருட்சம் பெற்ற போது...!!

=================================

கார்மேகத்தை கலைத்த காற்று...

நீலமேகம் நீ கலங்குவாய் என்றோ...!!!

அல்ல...

மண் மீது தான் கொண்ட காதலை, மழையாய் நீ நனைப்பாய் என்றோ...!!!

=================================

கூரை நெய்ய  குச்சி எடுத்துச் செல்லும் குருவியைக் கண்டு இரைக்காக சிறையில் வாழும் கூண்டு கிளிக்கு பரிதாபம்.

=================================

No comments:

Post a Comment

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...